காரிருள் பிரியு முன்னே கழனியை நாடித் தூய ஏரிலே நெஞ்சைப் பூட்டி இன்புறும் துணைவரோடு, சீரிலே வாழும் மாதர் சென்றுமே பணிகள் செய்து பார்புகழ் கொழிக்க வாழும் பண்பினர் வாழும் நாடு! கொட்டிடும் மழை காலத்தும் கோப்பையைக் கையிலேந்தி, கட்டெழில் கயலின் கண்ணார் கன்றினை அவிழ்த்துச் சென்று இட்டமாயப் பால் கநற்து இதமுறப் பதமுமேற்றி பட்டினப் பகுதிக் கெல்லாம் பால் கொடுப்போர் வாழ் நாடு! ஏடுகள் கண்டி ராத இன்கவி பிறக்கும் பூமி கூடவே மூவினத்தோர் கொள்கைகள் [...]


