2004இல் சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட போது மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளுள் பொத்துவில் அறுகம் குடா சார்ந்த உல்லைப் பகுதியும் அடங்கும். இங்கு உறுதியாக அமைந்திருந்த பாலம் சிறிய சேதங்களுக்கு மட்டுமே உள்ளானது. ஆனால் பாலத்தின் தொடர்ச்சியாய் அமைந்த பாதை பொங்கியெழுந்த கடல் நீரினால் கழுவிச் செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பின்னர் பாதைகள் அழிந்த இடங்கள் ஒரு தற்காலிக பாரிய புதிய இரும்புப் பாலமொன்றினால் ஈடு செய்யப்பட்டது. அது தொடர்புகளை பரந்து விரியச் செய்தது. போக்குவரத்தினை வழமை நிலைக்கு கொண்டு வந்தது. அந்த புதிய பாலத்தின் தோற்றமே இது.

சுனாமியின் பின்னரும் உறுதியாக நிலைத்து நின்று தன் பணி தொடரும் பழைய பாலத்தினையும் பார்த்துவிடல் அவசியமல்லவா? ஆம், இதோ பழைய பாலத்தின் தோற்றமொன்று. குறிப்பு: இந்த நிழற்படம் சுனாமிக்குப் பின்னர் (2005.07.13ஆம் திகதி) எடுக்கப்பட்டது.




Posted by Tharique Azeez on மே 11, 2009 at 1:54 பிற்பகல்
Test one
Posted by Tharique Azeez on மே 11, 2009 at 1:54 பிற்பகல்
Another threaded test..