2004இல் சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட போது மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளுள் பொத்துவில் அறுகம் குடா சார்ந்த உல்லைப் பகுதியும் அடங்கும். இங்கு உறுதியாக அமைந்திருந்த பாலம் சிறிய சேதங்களுக்கு மட்டுமே உள்ளானது. ஆனால் பாலத்தின் தொடர்ச்சியாய் அமைந்த பாதை பொங்கியெழுந்த கடல் நீரினால் கழுவிச் செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பின்னர் பாதைகள் அழிந்த இடங்கள் ஒரு தற்காலிக பாரிய புதிய இரும்புப் பாலமொன்றினால் ஈடு செய்யப்பட்டது. அது தொடர்புகளை பரந்து விரியச் செய்தது. போக்குவரத்தினை [...]
அக்டோபர், 2006 க்கான தொகுப்பு
4 அக்
பொத்துவில் மண்மலை
இனிய இயற்கை காட்சிகள் நிறையவே நிறைந்த பொத்துவிலின் அழகுக்கு அழகு சேர்ப்பதாய் இயற்கையாய் அமைந்ததே மண்மலை என்றால் மிகையில்லை. இது பொத்துவிலின் கிழக்கே அமைந்துள்ள கடற்கரையை அண்டிய பகுதியில் உறுதியுடன் நிமிர்ந்து நிற்கக் காணலாம். மண் ஒன்று சேர்ந்து மலையாக உருவெடுத்துள்ளது, ஓர் ஆச்சரியமான விடயம்தான். இதன் உயரம் 32 அடியையும் விஞ்சி நிற்பதை அங்கு செல்லும் எவரும் உணர்ந்து கொள்வர். இதன் உச்சியில் நின்று திக்கெல்லாம் நோக்கும் போது, அலை பாயும் கடல், செழித்து வளர்ந்த [...]
4 அக்
எங்கள் ஊர் பொத்துவில்
காரிருள் பிரியு முன்னே
கழனியை நாடித் தூய
ஏரிலே நெஞ்சைப் பூட்டி
இன்புறும் துணைவரோடு,
சீரிலே வாழும் மாதர்
சென்றுமே பணிகள் செய்து
பார்புகழ் கொழிக்க வாழும்
பண்பினர் வாழும் நாடு!
கொட்டிடும் மழை காலத்தும்
கோப்பையைக் கையிலேந்தி,
கட்டெழில் கயலின் கண்ணார்
கன்றினை அவிழ்த்துச் சென்று
இட்டமாயப் பால் கநற்து
இதமுறப் பதமுமேற்றி
பட்டினப் பகுதிக் கெல்லாம்
பால் கொடுப்போர் வாழ் நாடு!
ஏடுகள் கண்டி ராத
இன்கவி பிறக்கும் பூமி
கூடவே மூவினத்தோர்
கொள்கைகள் வாழும் பூமி,
தேடரும் வாவி மூன்றைத்
தன்னகம் கொண்ட தாலே
பாடகர் பாவில் போற்றும்
பொத்துவில் எங்கள் ஊரே!
1968.10.14ஆம் திகதி தினபதி பத்திரிகையில் வெளியான கவிதை.


